BREAKING NEWS
latest

Saudi Arabia - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Saudi Arabia செய்திகள், கட்டுரைகள், Saudi Arabia புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, October 10, 2023

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர் வெடிகுண்டு இல்லை என்று கூறியதால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

Image : Saudi Arabia Airport

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் உள்ள தமாம் விமான நிலையத்தில், தனது பேக்கேஜில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதால் வெடிகுண்டு இல்லை என்று கூறிய இந்தியர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறுதியாக ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒத்துழையாமை மற்றும் தவறாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

துபாய் செல்வதற்காக தமாம் விமான நிலையத்திற்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரிடம் சிக்கினார். Fly Dubai விமானத்தில் டிக்கெட் எடுத்து கொண்டு, அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது பிடிபட்டார். பையில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதற்கு, கோபமடைந்த பயணி விமான நிலைய அதிகாரியிடம் பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கூறினார்.

இதுபற்றி விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மோப்ப நாய் அடங்கிய தீவிரவாத தடுப்பு பிரிவு பாதுகாப்பு பிரிவினர் பயணியை கைது செய்ய விரைந்தனர். அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு, நாட்டில் நுழைய முடியாதபடி நாட்டை விட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய தகவலறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது மனைவி தமாமில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தூதரகத்தின் உதவியுடன் சட்ட உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் நீதிமன்ற உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டதால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர் தமாமில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Engineer | Saudi Airport | Saudi Jail

Add your comments to Search results for Saudi Arabia

Thursday, February 2, 2023

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு:

சவுதி அறிமுகம் செய்த 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் அறியாமல் இந்த புதிய வகையான விசாவுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

Image : Saudi Arabia City

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு

சவுதி வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை முதல் 96 மணிநேர " உங்கள் டிக்கெட் உங்கள் விசா" என்ற 4 நாட்கள் Validity உள்ள Transit விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதை எப்படி பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை இங்கே பார்க்கலாம்:

இந்தியா, இலங்கை உள்ளிட்ட சவுதியுடன் வெளியுறவு வைத்துள்ள உலகின் எந்த நாட்டினராக இருந்தாலும், எங்கு வசிக்கின்ற நபர்களாக இருந்தாலும் இந்த விசாவை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

இந்த Transit Visa-வை நீங்கள் சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் உங்கள் டிக்கெட்களை முன் பதிவு செய்யும்போது ட்ரான்சிட் விசாவிற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு பணத்தையும் இந்த நேரத்தில் செலுத்த வேண்டியது இருக்கும்.

விசா பெற முயற்சிக்கும் நபர் இந்த தளங்களில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது Multiple City Option-ஐ தேர்வு செய்து இந்த இலவச விசா பெறுவதற்காக உங்கள் புகைப்படம் மற்றும் சில விபரங்கள் பதிவேற்றியவுடன் நீங்கள் பதிவு செய்கின்ற உங்களுடைய Mail ஐடிக்கு 3 நிமிடங்களில் விசா வந்து சேரும்.

இப்படி பெறுகின்ற விசாவின் அதிகபட்சமாக செல்லுபடியாகும் நாட்கள் 90 தினங்கள் மட்டுமே. இந்த 90 நாட்களுக்குள் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சவுதியில் நுழைந்த பிறகு அதிகபட்சமாக 4 நாட்கள்( 96 மணிநேரம்) அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இந்த நான்கு நாட்களில் உம்ரா செய்வது அல்லது சவுதியின் எந்த இடத்திற்கும் செல்லலாம் சுற்றி பாக்கலாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம், உங்கள் உறவினர்கள் அங்கு இருந்தால் அவர்களை சென்று சந்திக்கலாம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். உம்ரா செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான செயலி வழியாக விண்ணப்பித்து கூடுதலாக அனுமதி பெற வேண்டும்.

இந்த புதிய விசா பெறுவதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:

Transit என்ன என்பது தெரியாத நபர்களுக்கு இந்த ஒரு வரி விளக்கம். எடுத்துகாட்டாக நீங்கள் துபாயில் இருந்து இந்தியா வருகின்ற நபர் என்று வைத்து கொள்ளுங்கள். பலர் பயணச்சீட்டு அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் நேரடியான விமானங்கள் பயன் படுத்தி இந்தியா வருவதில்லை. மாறாக இடையில் ஓமன், குவைத், சவுதி, கத்தார் இப்படி எதாவது ஒரு நாட்டின் விமான நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அல்லது அதே விமானத்தில் அங்கிருந்து சென்னைக்கான விமானத்தில் வருவார்கள் இதுவே Transit எனப்படும்.

இப்படி வருகின்ற நபர்களுக்கு இந்த புதிய வகையான விசா பயன்படுத்தி சவுதியில் நுழைய முடியு‌ம். ஆமா கண்டிப்பாக நீங்கள் இன்னொரு நாட்டிற்க்கு செல்வதற்காக மற்றொரு விசாவை வைத்திருக்கின்ற நபராக இருக்க வேண்டும்.

மேலும் புரிதலுக்காக நீங்கள் இந்தியர் என்று வைத்து கொள்ளுங்கள் துபாயில் வேலைக்காக சென்று தங்கியுள்ள நபர் விடுமுறைக்காக தாயகம் வருகின்ற நேரத்தில் இந்திய புதிய விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து பிறகு இந்தியா கிளம்பலாம். இதுபோல் விடுமுறைக்காக இந்தியா வந்த நபர் என்று வைத்து கொள்ளுங்கள் நீங்கள் மீண்டும் துபாய்க்கு இந்தியாவில் இருந்து கிளம்பும் போதும் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு தங்கியிருந்து மீண்டும் துபாய் புறப்பட்டு செல்ல முடியும்.

மாறாக எந்தவொரு நாட்டின் விசாவும் இல்லாத நபர் நீங்கள் என்றால் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டவராக இருந்தாலும் சவுதி சென்று மீண்டும் தாய்நாடு திரும்ப முடியாது. ஆமா இந்த புதிய வகையான விசா உங்களுக்கு கிடைக்காது.

இல்லாமல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டில் இருந்து இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதிக்கு சென்று மீண்டும் உங்கள் நாட்டிற்கே திரும்புவது என்ற இருவழி பயணத்தை மேற்கொள்ள முடியாது. சுருக்கமாக சொன்னால் நீங்கள் இன்னொரு நாட்டின் விசா கைவசம் வைத்திருந்தால் இடையில் சவுதியில் இறங்கி 4 நாட்கள் அங்கு செலவிட்டு மீண்டும் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Visa | New Visa | Transit Visa

Add your comments to Search results for Saudi Arabia

Sunday, February 11, 2024

முஸ்லீம்கள் புனித மாதமாக கருதும் ரமாலான் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே

சவுதி அரேபியா ஷஃபான் மாதம் துவங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Image credit: பிறை தென்பட்ட காட்சி

முஸ்லீம்கள் புனித மாதமாக கருதும் ரமாலான் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே

சவுதி அரேபியாவில் ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் ரஜப் மாதம் 29 ஆம் நாள் நேற்றுடன் முடிவடையும் நிலையில், நேற்றைய தினம் ஷஃபான் மாதத்திற்கான பிறை தேடும் நாளாக கருதப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு ஜித்தாவில் தொலை நோக்கி வழியாக ஆய்வு செய்த போது பிறை தென்பட்டதன் அடிப்படையில், இன்று (11-2-2024) ஞாயிற்றுக்கிழமை ஷஃபான் மாதத்தின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் துவங்க இந்த ஒரு மாதம் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பிறை தென்பட்ட கூடுதல் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

Image credit: பிறை தேடும் காட்சி

Image credit: பிறை தேடும் காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Ramadan 2024 | Gulf Ramadan |

Add your comments to Search results for Saudi Arabia

Sunday, November 15, 2020

சவுதியில் மரங்களை வெட்டினால் ரூ.59.75 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை:

சவுதியில் மரங்களை வெட்டினால் ரூ.59.75 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை:


               (Asia மாவட்டம், Faifa, Saudi Arabia)

Nov 15, 2020 

சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் 3 கோடி ரியால் அபராதம்( இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 59 கோடியே 75 லட்சம் ரூபாய்) மற்றும்  10 வருடங்கள் சிறை தண்டனையும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் அழிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக மரங்களை வெட்டுவதற்கும், அவை சார்ந்த மண் வளத்தை அபகரிப்பதற்கும் இந்த  கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

மரங்களை வெட்டுவது, மருத்துவ வகை தாவரங்கள் மற்றும் பிற தாவரங்களை வேருடன்  பிடுங்குவது, இலைகளை உரிப்பது மற்றும் மரத்தின் கீழ் பகுதிகளில்  இருந்து மண்ணை அகற்றுவது அனைத்தும் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.  

பாலைவன நாடான சவுதியில், சுற்றுச்சூழல் வளத்தை பெருக்குவதற்காக விஷன் 2030-யின் ஒரு பகுதியாக, நாட்டை பசுமையாக்கும் நடவடிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு நாடு முழுவதும் 1 கோடி மரங்களை நடும் திட்டத்தின் முதல் கட்டம் ஏப்ரல் 2021-க்குள் நிறைவடையும்.


 


Add your comments to Search results for Saudi Arabia

Friday, August 27, 2021

சவுதியில் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையும் உயிரிழந்த நிலை‌யி‌ல்;கணவர் தாயகத்தில் தற்கொலை செய்து கொண்டார்

சவுதியில் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையும் கோவிட் காரணமாக உயிரிழந்த நிலை‌யி‌ல்;இந்தியா திரும்பிய கணவர் தற்கொலை செய்து கொண்டார்

Image : உயிரிழந்த விஷ்ணு மற்றும் காதா

சவுதியில் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையும் உயிரிழந்த நிலை‌யி‌ல்;கணவர் தாயகத்தில் தற்கொலை செய்து கொண்டார்

சவுதி அரேபியாவில் வைத்து தன்னுடைய உயிரிலும் மேலான மனைவி மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தையும் இறந்த நிலையில் வீடு திரும்பிய இந்திய இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள பெரும் துயரமான செய்தி தற்போது வெளியாகி வளைகுடா இந்தியர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை கேரளா மாநிலம், ஆலுவா, செங்கமநாடு, கப்பரசேரி உள்ள அவருடைய வீட்டில் வைத்து விஷ்ணு(வயது-32) இந்த முடிவை எடுத்துள்ளார். சவுதி அரேபியாவின்,கதிஃப் நகரில் கணக்காளரான விஷ்ணு தன்னுடைய மனைவி காதா(வயது-27) உடன் வசித்து வந்தார். ஆறு மாத கர்ப்பிணியாக இருந் மனைவியை நாட்டுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளை செய்த நிலையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டார் என்பது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர் கதிஃபில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு கவலைக்கிடமாக நிலையில் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறிது நேரத்தில் காதா உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தையும் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தது. இந்நிலையில் இருவரின் உடலையும் அங்கேயே அடக்கம் செய்துவிட்டு. இந்த மாதத்தின் ஐந்தாம் தேதி விஷ்ணு நாட்டிற்கு வந்தார். அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்று அவருடைய பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் குடும்பத்தினர் யாரும் எதிர்பாராத நிலையில் அவர் இந்த முடிவை தேடியுள்ளார். காதா மற்றும் குழந்தை உயிரிழந்த நிலையில் அந்த நேரத்தில், அன்றைய தினம் அரபு தமிழ் டெய்லி வெளியிடப்பட்ட செய்தி Link:https://www.arabtamildaily.com/2021/07/an-indian-mother-and-her-infant-child-died-in-saudi-arabia-due-to-covid.html

Add your comments to Search results for Saudi Arabia

Thursday, July 22, 2021

சவுதியில் முக்கியமான இடங்களில் நுழைய ஆகஸ்ட் முதல் தடுப்பூசி கட்டாயம் என்ற தகவல் வெளியாகியுள்ளன

சவுதியில் உணவகங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் நுழைய ஆகஸ்ட் முதல் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

Image : Saudi Arabia

சவுதியில் முக்கியமான இடங்களில் நுழைய ஆகஸ்ட் முதல் தடுப்பூசி கட்டாயம் என்ற தகவல் வெளியாகியுள்ளன

சவுதி அரேபியாவில் ஆகஸ்ட்-1,2021 முதல் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று நகராட்சி ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் மால்கள், உணவகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த இடங்களுக்குச் செல்லும்போது,தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆவணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Add your comments to Search results for Saudi Arabia

Wednesday, October 23, 2019

சவுதியில் பொதுமன்னிப்பா....??? உண்மை நிலவரம் இதோ:

சவுதியில் பொதுமன்னிப்பு என்பது பொய்யான தகவல்; 
         பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் உதவுகிறது, மற்ற நாட்டவர்கள் ஏமாற வேண்டாம்:


உண்மைநிலவரம்:

பல்வேறு பிரச்சினைகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகத்தின் முயற்சி மூலம் நாள் ஒன்றுக்கு 20 பேர் வரையில் தாயகம் செல்ல உதவுகிறார்கள் இதுவே உண்மை.....

விரிவாக பார்ப்போம்:

சவுதியில் பொதுமன்னிப்பு என்று கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி பல தளங்களில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து சவுதியில் தவிக்கும் பல உறவுகள் அதை எங்கள் தளத்தின் WhatsApp எண்ணுக்கு அனுப்பி இதை உண்மை நிலவரம் குறித்து கேட்டனர். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதன் உண்மை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சவுதியில் விசா( இக்கமா) காலாவதியாகி தவிக்கும் இந்தியர்களுக்கு, சவுதி இந்திய தூதரகத்தின் உதவியுடன் அபராதம் செலுத்தாமல் தாயகம் திரும்ப உதவிகள் செய்யப்படுகிறது. இதைதான் சிலர் திரித்து(தவறாக) பொதுமன்னிப்பு என்று பரப்பி வருகிறார்கள்.

முதலில் புரிந்து கொள்ளுங்கள் இந்திய தூதரகத்தில் புகார் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும், சவுதியில் ரியாதில் உள்ள இந்திய தூதரகத்தின் Community Welfare Wing பிரிவின் முயற்சி மூலம் சவுதி அரசின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் முயற்சியாக இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் முதலில் தூதரகத்தில்
 கம்மியூனிட்டி வெல்ஃபேர் விங் (Community Welfare Wing) அணுகி உங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்  அதாவது புகார் கொடுக்க வேண்டும், அங்கிருந்து கிடைக்கும் கடிதம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றுடன், சவுதியின் ரியாதில் உள்ள தர்ஹீல் அதாவது நாடுகடத்தல் மையத்திற்கு அழைத்துச் சென்று எந்த குற்றப்பின்னணியும் இல்லாதிருந்தால் Exitpass அடித்து கொடுக்கபட்டு வருகிறது.

 அதுவும் இந்திய தூதரக அதிகாரி தெரிவிக்கும் நேரத்தில் மட்டுமே இங்கு செல்ல வேண்டும். அந்த நேரத்தில் செல்லும் நபர்களுக்கு  Final Exit கிடைக்கும், மேலும் இப்படி Final Exit கிடைக்கும் இந்தியர்கள் குறிப்பிட தேதிகள், நீங்களே பயணச்சீட்டு எடுத்து சவுதியில் இருந்து வெளியேற வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 20 பேர் என்ற விகிதத்தில் இந்த Final Exit வழங்கப்படுகிறது. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வீட்டு வாகன ஓட்டுனர்கள் (House Driver), வீட்டு பணிப்பெண்கள் (House maid), கஃபீல் மூலம் புகார் (ஹுரூஃப்) செய்யப்பட்டவர்கள், இக்காமா காலாவதி ஆகியும் புதுப்பிக்க முடியாதவர்கள் மற்றும் இக்காமாவே வைத்திருக்காதவர்கள், ஆகிய அனைவருக்கும் இந்த உதவி கிடைக்கும். பாஸ்போர்ட் இல்லாத இந்தியர்கள் Outpass- க்கு இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்க சொன்னால் இதை செய்யுங்கள்.

அதாவது ஈஸி அவுட் பாஸ் அல்லது ஒயிட் பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொன்னால் கீழ் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1. ஈஸி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்

2. அவசர கால சான்றிதழ் அவுட் பாஸ் அல்லது ஒயிட் பாஸ் விண்ணப்ப படிவங்களை இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

3. பாஸ்போர்ட் நகல் (முதல் மற்றும் கடைசி பக்கம்)

4. புகைப்படம் இரண்டு ஒயிட் பேக்கிரவுண்ட்

5. இக்காமா நகல் / விசா ஸ்டாம்பிங் நகல் (இவை இருந்தால் இணைப்பது நல்லது, கட்டாயம் இல்லை)

6. கட்டணம் ஏதும் வசூலிக்கபடமாட்டாது

7. விண்ணப்பம் அளித்த 5 முதல் 7 நாட்களில் ஈஸி பாஸ் கிடைக்கும்

8. பாஸ்போர்ட் காலவதி ஆகியிருந்தால் ஈஸி பாஸ் தேவை இல்லை

9. ஈஸி பாஸ் கிடைக்க பெற்றவர்களுக்கு பாஸ்போர்ட் ரத்து ஆகிவிடும்.  (இந்தியா சென்ற பின் புதிய பாஸ்ப்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்)

மேலும் இது தொடர்பான சந்தேங்கள் மற்றும் உதவிகளுக்கு இந்தியா தூதரங்கள் மற்றும் துணை தூதரங்களை தொடர்பு கொள்ளவும்.

இந்தியா தூதரங்கள் ரியாத் மற்றும் ஜித்தா பணி நேரங்கள் :

காலை 9:00 முதல் மாலை 5:30 வரை (Sunday to Thursday).

Riyadh Address :

B-1 Diplomatic Quarter, PO Box 94387, Riyadh 11693, Saudi Arabia, Tel No : 011-4884144 / 488469. Fax No : 011 4884750.

Jeddah Address :

Building of Mr. Mansoor Abdul Rahman Al Hueesb, Villa No 34, Behind national commercial bank, Near Al Huda Mosque, Tahlia Street, Jeddah. Tel : 012-2614093. Fax No : 012-2840238.

சவுதி இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில் கண்டிப்பாக இது பொதுமன்னிப்பு அல்ல, மனிதாபிமான அடிப்படையில்  பாதிக்கப்பட்டு தவிக்கும்  இந்தியர்களுக்கு  உதவுவதற்கு எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சியே.

Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to Search results for Saudi Arabia

Tuesday, August 24, 2021

சவுதியில் தற்காலிகமாக நுழைய தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் நேரடியாக நுழைய முடியும் என்ற நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது

சவுதியில் இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நேரடியாக நுழைய அனுமதி தொடர்பான லெபனான் தூதர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

Image : Saudi Arabia

சவுதியில் தற்காலிகமாக நுழைய தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் நேரடியாக நுழைய முடியும் என்ற நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது

சவுதியில் கொரோனா காரணமாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் நேரடியாக நுழைய வரும் நாட்களில் அனுமதி வழங்கப்படும் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இது தொடர்பான சுற்றறிக்கை அங்குள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு சவுதி வெளியுறவுத்துறை அனுப்பியதாக சற்றுமுன் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் இது உறுதிப்படுத்தும் விதமாக சவுதி லெபனான் தூதரக அதிகாரி வலீத் புகாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சவுதி அரேபியாவில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்து தாயகம் சென்றவர்கள் மீண்டும் சவுதியில் நேரடியாக நுழைய எந்த தடையும் இல்லை எனவும், சவுதியின் Validity இகாமாவுடன், இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற வெளிநாட்டவர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் நேரடியாக திரும்ப முடியும் எனவும் ஆனால் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தற்போது அனுமதி இல்லை எனவும் அவர் தூதரகத்தின் அதிகாரப்பூர்வமாக கணக்கு வழியாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சவுதியில் நுழைய Immune Green Signal கிடைத்த இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் முன்றாவது ஒரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து அங்கிருந்து பயண விதிமுறைகள் பின்பற்றி சவுதியில் நுழைந்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த புதிய அறிவிப்பின் பலன் கிடைக்குமா மற்றும் புதிய பயண நெறிமுறைகள் என்னவாக இருக்கும் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் சவுதி வெளியுத்துறை சார்பில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வரும் மணிநேரங்களில் தெரிய வரும்.

Add your comments to Search results for Saudi Arabia

Wednesday, January 24, 2024

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மதுபானக் கடையை திறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

சவுதி மதுபானக் கடையை திறக்கத் தயாராகி வருகிறது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : சவுதி அரேபியா சிட்டி

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மதுபானக் கடையை திறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

சவுதி அரேபியா தனது முதல் மதுபானக் கடையை தலைநகர் ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது, இது முஸ்லீம் அல்லாத குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள வெளிநாட்டினருக்காக மட்டுமே சேவை செய்யும் என்ற செய்தி இன்று(24/01/24) மாலையில் வெளியாகியுள்ளது.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், முஸ்லீம் கொள்கைகள் தீவிரமாக பின்பற்றும் நாட்டை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறக்க சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் ஆகும். எண்ணெய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தை உருவாக்க விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

மேலும் முஸ்லீம் அல்லாத சாதாரண வெளிநாட்டினர் இந்த கடைக்கு செல்ல முடியுமா என்பது தொடர்பான தகவல்கள் தெளிவாக இல்லை. மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ஆசியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை சற்றுமுன் பல பிரபலமான செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Alcohol Store | First Shop

Add your comments to Search results for Saudi Arabia

Sunday, July 16, 2023

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவில் உள்ள அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Image : தீயிணை அணைக்கும் காட்சி

சவுதியில் பெரும் தீ விபத்து 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான அல்-ஹஸ்ஸாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 10 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அல் ஹஸ்ஸாவின் ஹுஃபுஃபில் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் நேற்று(14/07/23) மாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, பட்டறையில் வேலை செய்த 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 பேர் இந்தியர்கள் மற்றும் 3 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

அடையாளம் காணப்பட்ட 5 இந்தியர்களில் ஒருவர் விபரங்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம், திருவனந்தபுரம் நெடுமங்காடு அடுத்த அழிக்கோடு அருகே வசித்து வந்த அஜ்மல் ஷாஜகான் என்கிற நிஜாம் என்பவர் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 4 பேர் இந்தியாவில் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அதேபோல் இருவர் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. கார் பணிமனையில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் பட்டறைக்கு மேலே வசித்தவர்கள். உடல்கள் அல் ஹாசா சென்டரல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து வந்த 10 தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

Saudi Arabia | Fire Accident | Indians Died

Add your comments to Search results for Saudi Arabia

Wednesday, February 3, 2021

சவுதி உள்துறை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது

சவுதி உள்துறை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது;புதிய முடிவு நாளை இரவு 9 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Image : Saudi Arabia

சவுதி உள்துறை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது

இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டில் நுழைய சவுதி உள்துறை அமைச்சகம் மீண்டும் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. நள்ளிரவில் திடிரென அறிவிக்கப்பட்ட இந்த புதிய முடிவு நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, பாகிஸ்தான், பிரேசில், போர்ச்சுகல், இங்கிலாந்து, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லெபனான், எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாடுகளில் உள்ள சவுதி நாட்டவர்கள், தூதரக அதிகாரிகள்,சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இந்த தடை பொருந்தாது.

சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு 14 நாட்கள் முன்னர் மேற்குறிப்பிட்ட நாடுகள் வழியாக கடந்து வந்த பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்ததடை பொருந்தும். மேலும் இந்த நாடுகளில் இருந்து சவுதி நாட்டவர்கள், தூதரக அதிகாரிகள்,சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றைக் கடந்து சென்றிருந்தால், சவுதி சுகாதார அமைச்சகத்தினால் நிர்ணயிக்கப்பட்டபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மட்டுமே நாட்டில் நுழைய முடியும். புதிய முடிவு நாளை(03/02/21) புதன்கிழமை சவுதி நேரப்படி இரவு 9 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமீரகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் துபாயினை தற்காலிக புகலிடமாக கொண்டு சவுதியில் நுழைய காத்திருக்கும் இந்திய, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை இந்த புதிய முடிவு அதிகளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அமீரகம் போல் மற்ற வளைகுடா நாடுகளுக்கு விசிட் விசா மூலம் நுழைந்து தற்காலிகமாக தங்கியிருந்து சவுதியில் நுழைவது அவ்வளவு எளிதாக காரியம் இல்லை என்பதும் ஒரு சவாலான காரணமாக உள்ளது. இந்த புதிய தற்காலிகமாக தடை உத்தரவு எத்தனை நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் இதில் புதிய முடிவில் மாற்றங்கள் எதாவது நடைமுறையில் வருமா என்பது வரும் மணிநேரங்களில் தான் தெரிய வரும்.

Add your comments to Search results for Saudi Arabia

Thursday, February 4, 2021

சவுதி அரேபியாவில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன; இன்றிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில்

சவுதி அரேபியாவில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன இன்றிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறையில் வருகின்றன

Image: Saudi Arabia

சவுதி அரேபியாவில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன; இன்றிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில்

சவுதி அரேபியா கோவிட் வைரஸ் தீவிரமடைந்து வருவதால் இன்று இரவு முதல் கடுமையான கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது. ஹோட்டல்களில் திருமண விருந்துகள் மற்றும் கூட்டங்கள் ஒரு மாதத்திற்கு தடை செய்யப்பட்டன. ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் 10 நாட்களுக்கு முதல்கட்டமாக தடை செய்யப்பட்டுள்ளன. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமரக்கூடாது, பார்சல்களில் மட்டுமே உணவு வழங்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட் கூட்டங்கள் மற்றும் பார்ட்டி உட்பட ஹோட்டல் மற்றும் ஆடிட்டோரியங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்களும் ஒரு மாதத்திற்கு தடை செய்யப்பட்டன. ஒரு மாதத்திற்கு திருமண மண்டபங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. திரைப்பட அரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், கேமிங் மையங்கள், ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்களை முதல்கட்டமாக பத்து நாட்களுக்கு மூட முடிவு செய்துள்ளது. சமூகக் கூட்டங்களில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றி அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவுகளை மீறுவது கண்டறியப்பட்டால் முதல்கட்டமாக 24 மணிநேரமும், இரண்டாவது கட்டமாக 48 மணிநேரமும், மூன்றாவது மீறல் கண்டறியப்பட்டால் ஒரு வாரமும், நான்காவது கண்டறியப்பட்டால் ஒரு மாதத்திற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சமூக கூட்டங்கள் மூடப்படும் அதிகாரிகள் சோதனையின் போது சி.சி.டி.வி சரிபார்த்து நடவடிக்கை எடுக்கும். நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு 300 க்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் சவுதி விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன. இதற்கிடைய இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விமானத் தடை நேற்று புதன்கிழமை இரவு முதல் காலவரையின்றி நடைமுறைக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.புதிய முடிவுகள் இன்று(04/02/21 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Add your comments to Search results for Saudi Arabia