BREAKING NEWS
latest

Kuwait News

Kuwait News/block-2

UAE News

Uae News/block-5

Saudi News

Saudi News/block-5

Oman News

Oman News/block-4

Qatar News

Qatar News/block-3

Bahrain News

Bahrain News/block-2

Srilanka News

Srilanka News/block-3

Tamil Nadu News

Tamil Nadu News/block-1

Latest Articles

Saturday, March 2, 2024

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தாயகம் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்

குவைத்தில் பொதுமன்னிப்பு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது

Image : ஷேக் ஃபஹத் அல் யூசுப் அவர்கள்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தாயகம் திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள்

குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என்று துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் அல் யூசுப் தெளிவுபடுத்தினார். இதற்காக மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதகால அவகாசம் வழங்கப்படும். குடியிருப்பு சட்டத்தை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறவும் அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதியை அபராதம் செலுத்தி சட்டப்பூர்வமாக்கவும் அவகாசம் அளிக்கப்படும் என்று குவைத் அரசு செய்தி நிறுவனத்துக்கு சற்றுமுன் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மன்னிப்பைப் பயன்படுத்தி நாடு திரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் சட்டம் திட்டங்களுக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் மீண்டும் குவைத்துக்குத் திரும்பி வருவதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். வாய்ப்பைப் பயன்படுத்தாமல் சட்டவிரோதமாக தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாட்டில் சுமார் 1,30,000 அளவுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறுபட்ட காரணங்களால் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் கடைசியாக பொதுமன்னிப்பு கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பொதுமன்னிப்பு அறிவிப்பு வழங்கப்படும் என்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தாலும் உள்துறை அமைச்சரிடமிருந்து முதல் முறை இது குறித்து உறுதிப்படுத்தல் அறிவிப்பு தற்போது தான் வெளியாகியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு எந்த நாளில் தொடங்கி எப்போது முடியும் மற்றும் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களில் எந்த பிரிவுகளில் வழக்குகள் நிலுவையிலுள்ள தொழிலாளிக்கு இந்த பொதுமன்னிப்பு பொருந்தும் உள்ளிட்ட விரிவான விபரங்கள் பொது மன்னிப்பு தொடர்பான உள்துறை அமைச்சகம் வெளியிடும் அறிவிப்பில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Friday, February 16, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய பகல் மற்றும் இரவு நேர வானிலை நிலவரம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(16/02/24) வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பமாக இருக்கும் மற்றும் ஓரளவு மேகமூட்டமாகவும்,தென்மேற்கு காற்று மணிக்கு 20-55 கிலொமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20°C அளவுக்கும் அதிகபட்சமாக வெப்பநிலை 28°C அளவுக்கும் இருக்கும் மற்றும் நாட்டின் சில இடங்களில் தூசியை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாக தூரப்பார்வை குறையும் வாய்ப்புள்ளதாகவும், சில நேரங்களில் சிதறிய மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சற்றுமுன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நாட்டில் இரவு நேரம் நல்ல குளிரான வானிலை நிலவும், குறிப்பாக நாட்டின் எல்லைப்புற பகுதிகளான பாலைவன மற்றும் விவசாய இடங்களில் இது உணர முடியும் எனவும், அதேபோல் மேக மூட்டம் படிப்படியாக குறையும், மழைக்கான வாய்ப்பும் படிப்படியாக குறையும். லேசானது முதல் மிதமான காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மாறி வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 10-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் சில பகுதிகளில் லேசான மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 06:00 மணி வரையிலான 9 மணி நேரத்திற்கான புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது, அதில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசும் எனவும், இதனால் நாட்டின் சில இடங்களில் பலத்த தூசிக்காற்று உயரும் மற்றும் சில பகுதிகளில் பார்வைத் திறன் குறையும் எனவும் மற்றும் கடல் அலை உயரம் 6 அடிக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை என்பதால் மனைவியுடன் நடந்து சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்

Image : மும்பை விமான நிலையம்

விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை என்பதால் மனைவியுடன் நடந்து சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா 116 விமானம் மும்பை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சிறிது தாமதமாக 2.10 மணியளவில் வந்தடைந்தது.இந்த விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 80 வயது முதியவர் தனது மனைவியுடன் மும்பைக்கு வந்திருந்தார். வணிக வகுப்பு இருக்கையில் பயணம் மேற்கொண்ட இருவரும், முன்னதாகவே சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக ஒரே ஒரு சக்கர நாற்காலி மட்டும் கிடைத்துள்ளது. அதனை மனைவிக்கு கொடுத்த முதியவர், விமானத்திலிருந்து குடியேற்ற சோதனை மையம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார். இந்த நிலையில், குடியேற்ற சோதனை மையம் அருகே வந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மருத்துவமனைக்கு முதியவரை அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில்,குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் சக்கர நாற்காலி கேட்டிருந்தனர். ஆனால், 15 நாற்காலி மட்டுமே இருந்ததால், அடுத்த சுற்றில் அனுப்பி வைப்பதாக முதியவரிடம் தெரிவித்தோம். ஆனால், வயது மூப்பால் இருவருக்கும் உள்ள உடல் பிரச்னை காரணமாக ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் எனக் கருதி அவர் தனது மனைவியுடன் நடந்து சென்றார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சான்று வைத்துள்ள பயணிகளை தவிர மற்ற பயணிகள் விமான நிலையங்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக மருத்துவ சான்று முறை நிறுத்திவைக்கப்பட்டு முதியவர்களுக்கு இலவச நாற்காலி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நடக்க முடிந்தவர்களும் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாட்டால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Old Citizen | Mumbai Airport | Passenger Death

Add your comments to

Thursday, February 15, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(15/02/24) வியாழக்கிழமை தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.35 KD
  2. 22K= 19.25 KD 
  3. 21K= 18.38 KD 
  4. 18K= 15.75 KD 

 (பதிவு காலை 11:30 AM மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத்தின் இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகளை நாடுகள் வாரியாக இங்கே அறியலாம்

Image : Today Exchange Rate Update

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(15/02/24) வியாழக்கிழமை இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 268.817
  • இலங்கை 1KD = 1014.816
  • நேபாளம் 1KD = 429.00
  • பிலிப்பைன்ஸ் 1KD = 181.488
  • பாகிஸ்தான் 1KD = 907.441

(பதிவு  காலை 11:00 AM மணி நிலவரப்படி மற்றும் சில நேரம் Exchange நிறுவனங்களை பொறுத்து இங்கு குறிப்பிட்டுள்ள மதிப்பில் சிறிய மாற்றங்கள் வரலாம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Exchange | Dinar Rate | Daily Update

Add your comments to

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தில் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேலை செய்வாதல் விபத்துகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள பரிதாபமாக உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது

Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தின் வேலைக்காக வந்த 34-வயது இளைஞர் Barr Al-Salmi பகுதியில் வேலை செய்து வந்த நிலையில் நேற்று(14/02/24) புதன்கிழமை பிற்பகல் உழவு இயந்திரத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்து Al-Shaqaya மையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

உடனடியாக அவரை அந்த இயந்திரத்தில் இருந்து மீட்டு எடுத்த போதும் துரதிர்ஷ்டவசமாக உழவு இயந்திரத்தில் சிக்கியதில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலாதிக்க விசாரணை மற்றும் கூடுதல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

எனவே தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து வேலைகளை செய்யுங்கள். நேற்று முந்தினம் 20-வயது தமிழக இளைஞர் பத்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்திக்கு இடையில், இந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.அதற்கும் இரு தினங்களுக்கு முன்பு வெவ்வேறான இரண்டு விபத்துகளில் 2 எகிப்து தொழிலாளர்கள் ஒரே நாளில் உயிரிழந்தது குறிப்படத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Nepalil Worker | Kuwait News | Gulf Worker

Add your comments to

குவைத் சந்தைகளில் மீன் வாங்க செல்லும் முன்னர் இதை படித்துவிட்டு செல்லவும்

குவைத்தில் மீன் விலை கடந்த சில நாட்களாக சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது

Image : குவைத் மீன் சந்தை

குவைத் சந்தைகளில் மீன் வாங்க செல்லும் முன்னர் இதை படித்துவிட்டு செல்லவும்

குவைத்தில் வசிக்கின்ற சாதாரண மக்கள் மீன் மற்றும் மீன் சந்தை பக்கம் நெருங்க முடியாத அளவுக்கு அனைத்து மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சுபைதி என்ற அரபு பெயருடைய உள்நாட்டில் பிடிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படுகிற வெள்ளை அயோலியின் விலை சுமார் 11 தினாருக்கு விற்கப்படுகிறது. அதேநேரம் ஒன்பது குவைத் தினார்களுக்கு இணையான மத்தியில் அதே அவோலி பஹ்ரைனில் கிடைக்கும் போது இந்த விலை உயர்வு குவைத்தில் ஏற்பட்டுள்ளது.

அதாவது பஹ்ரைன் சந்தையுடன் ஒப்பிடும்போது, இதன் விலை குவைத்தில் இருபது சதவீதம் அதிகம். இதே மீன் கத்தாரில் ஒரு கிலோ சுமார் 2.2 குவைத் தினார்களுக்குச் சமம். கத்தாரின் விலையுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 385 சதவீதம் ஆகும். சவுதி அரேபியாவில் 4.2 குவைத் தினார்களுக்கு சமமான சவுதி ரியாலுக்கு அதே ஆவோலி ஒரு கிலோ கிடைக்கும். இது மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள விலைகளுடன் ஒப்பிடுகையில் சவுதியை விட 161 சதவீதம் அதிகம் ஆகும். மற்ற வளைகுடா நாடுகளுடன் ஒப்படும் போது குவைத்தில் மீன் விலையில் பெரும் வித்தியாசம் இருப்பதாக உள்ளூர் செய்தித்தாள் தயாரித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

அதேபோல் குவைத்தில் ஒரு கிலோ ஹமோர் 4 தினார் என்றால், இதன் விலை கத்தாரில் 2.1 தினார் மற்றும் சவுதி அரேபியாவில் 2.2 தினார். இப்படியே போனால், ரம்ஜான் தொடங்கும் பட்சத்தில், நாட்டில் மீன் குறைந்த விலை சாமானியர்களுக்கு கிடைப்பது குறையும். மேலும் விலைவாசி தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு உயரும் என நுகர்வோர்(மக்கள்) கவலையடைந்துள்ளனர். எனவே சாமானியர்கள் ருசியான மற்றும் தரமான மீன்களை வாங்காமல், எப்போதும் போல் சாதாரண வகை மீன்களை மட்டுமே வாங்கும் சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fish Market | Kuwait Market | Fish Price

Add your comments to