BREAKING NEWS
latest

New Visa - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் New Visa செய்திகள், கட்டுரைகள், New Visa புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Thursday, February 2, 2023

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு:

சவுதி அறிமுகம் செய்த 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் அறியாமல் இந்த புதிய வகையான விசாவுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

Image : Saudi Arabia City

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு

சவுதி வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை முதல் 96 மணிநேர " உங்கள் டிக்கெட் உங்கள் விசா" என்ற 4 நாட்கள் Validity உள்ள Transit விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதை எப்படி பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை இங்கே பார்க்கலாம்:

இந்தியா, இலங்கை உள்ளிட்ட சவுதியுடன் வெளியுறவு வைத்துள்ள உலகின் எந்த நாட்டினராக இருந்தாலும், எங்கு வசிக்கின்ற நபர்களாக இருந்தாலும் இந்த விசாவை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

இந்த Transit Visa-வை நீங்கள் சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் உங்கள் டிக்கெட்களை முன் பதிவு செய்யும்போது ட்ரான்சிட் விசாவிற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு பணத்தையும் இந்த நேரத்தில் செலுத்த வேண்டியது இருக்கும்.

விசா பெற முயற்சிக்கும் நபர் இந்த தளங்களில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது Multiple City Option-ஐ தேர்வு செய்து இந்த இலவச விசா பெறுவதற்காக உங்கள் புகைப்படம் மற்றும் சில விபரங்கள் பதிவேற்றியவுடன் நீங்கள் பதிவு செய்கின்ற உங்களுடைய Mail ஐடிக்கு 3 நிமிடங்களில் விசா வந்து சேரும்.

இப்படி பெறுகின்ற விசாவின் அதிகபட்சமாக செல்லுபடியாகும் நாட்கள் 90 தினங்கள் மட்டுமே. இந்த 90 நாட்களுக்குள் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சவுதியில் நுழைந்த பிறகு அதிகபட்சமாக 4 நாட்கள்( 96 மணிநேரம்) அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இந்த நான்கு நாட்களில் உம்ரா செய்வது அல்லது சவுதியின் எந்த இடத்திற்கும் செல்லலாம் சுற்றி பாக்கலாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம், உங்கள் உறவினர்கள் அங்கு இருந்தால் அவர்களை சென்று சந்திக்கலாம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். உம்ரா செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான செயலி வழியாக விண்ணப்பித்து கூடுதலாக அனுமதி பெற வேண்டும்.

இந்த புதிய விசா பெறுவதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:

Transit என்ன என்பது தெரியாத நபர்களுக்கு இந்த ஒரு வரி விளக்கம். எடுத்துகாட்டாக நீங்கள் துபாயில் இருந்து இந்தியா வருகின்ற நபர் என்று வைத்து கொள்ளுங்கள். பலர் பயணச்சீட்டு அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் நேரடியான விமானங்கள் பயன் படுத்தி இந்தியா வருவதில்லை. மாறாக இடையில் ஓமன், குவைத், சவுதி, கத்தார் இப்படி எதாவது ஒரு நாட்டின் விமான நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அல்லது அதே விமானத்தில் அங்கிருந்து சென்னைக்கான விமானத்தில் வருவார்கள் இதுவே Transit எனப்படும்.

இப்படி வருகின்ற நபர்களுக்கு இந்த புதிய வகையான விசா பயன்படுத்தி சவுதியில் நுழைய முடியு‌ம். ஆமா கண்டிப்பாக நீங்கள் இன்னொரு நாட்டிற்க்கு செல்வதற்காக மற்றொரு விசாவை வைத்திருக்கின்ற நபராக இருக்க வேண்டும்.

மேலும் புரிதலுக்காக நீங்கள் இந்தியர் என்று வைத்து கொள்ளுங்கள் துபாயில் வேலைக்காக சென்று தங்கியுள்ள நபர் விடுமுறைக்காக தாயகம் வருகின்ற நேரத்தில் இந்திய புதிய விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து பிறகு இந்தியா கிளம்பலாம். இதுபோல் விடுமுறைக்காக இந்தியா வந்த நபர் என்று வைத்து கொள்ளுங்கள் நீங்கள் மீண்டும் துபாய்க்கு இந்தியாவில் இருந்து கிளம்பும் போதும் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு தங்கியிருந்து மீண்டும் துபாய் புறப்பட்டு செல்ல முடியும்.

மாறாக எந்தவொரு நாட்டின் விசாவும் இல்லாத நபர் நீங்கள் என்றால் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டவராக இருந்தாலும் சவுதி சென்று மீண்டும் தாய்நாடு திரும்ப முடியாது. ஆமா இந்த புதிய வகையான விசா உங்களுக்கு கிடைக்காது.

இல்லாமல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டில் இருந்து இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதிக்கு சென்று மீண்டும் உங்கள் நாட்டிற்கே திரும்புவது என்ற இருவழி பயணத்தை மேற்கொள்ள முடியாது. சுருக்கமாக சொன்னால் நீங்கள் இன்னொரு நாட்டின் விசா கைவசம் வைத்திருந்தால் இடையில் சவுதியில் இறங்கி 4 நாட்கள் அங்கு செலவிட்டு மீண்டும் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Visa | New Visa | Transit Visa

Add your comments to Search results for New Visa

Monday, January 18, 2021

குவைத்திற்கு புதிதாக வீட்டுத் தொழிலாளர்களை அழைத்துவர 990 தினார்கள் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

குவைத்துக்கு புதிதாக வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான கட்டணமாக  990 தினார்களை குவைத் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம், மனிதவளத்திற்கான பொது ஆணையம் இணைந்து நிர்ணயித்துள்ளது. ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் மூலம் கொண்டுவரப்படும் வீட்டுத் தொழிலாளர்களுக்கான செலவு 990 தினார்கள் எனவும் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் நேரடியாக Sponsore அழைத்துவர 390 தினார்கள் செலவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

மேலும் ஏஜென்சி அலுவலகங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் வீட்டுத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது முதலாளியின் வீட்டில் வேலை செய்ய வேண்டும், இல்லையென்றால், ஆட்சேர்ப்பு அலுவலகம் வீட்டு உரிமையாளருக்கு இழப்பீடு மற்றும் வீட்டுப் பணியாளரை திருப்பி அனுப்புவதற்கான செலவை செலுத்த வேண்டும்.  கோவிட் சூழலில், ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து குடிமக்கள் தொடர்ந்து
பல புகார்கள் எழுந்தன.  இந்த முடிவு குடிமக்கள் மீதான நிதிச்சுமையைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்றும், அரசாங்கம் நிர்ணயித்த தொகையை விட கட்டணம் அதிகமாக இருந்தால் வர்த்தக அமைச்சின் நுகர்வோர் பாதுகாப்பு ஹாட்லைன் எண் 135 அல்லது domestic.workers@manpower.gov.kw மூலமாகவும் புகார் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பி.சி.ஆர் சோதனை, சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் செலவுகளை ஆட்சேர்ப்பு அலுவலகங்கள் ஏற்க வேண்டும் என்பதால்,இப்படி புதிதாக அழைத்துவரும் தொழிலாளர்களை அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொகைக்கு குடிமக்கள்(அரபிகள்) வாங்க முடியாது என்று ஆட்சேர்ப்பு முகவர் தெளிவுபடுத்தியுள்ளது. வீட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான செலவு 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனவும், கோவிட் சூழ்நிலையில் வர்த்தக அமைச்சின் முடிவை ஏற்க முடியாது என்பது உள்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலக ஒன்றியத்தின் கருத்தாக உள்ளது.

Kuwait Recruitment | Domestic Workers | New Visa

Add your comments to Search results for New Visa

Sunday, June 13, 2021

இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது

Image : பஹ்ரைன் விமான நிலையம்

இந்தியர்களுக்கான புதிய வேலை விசாக்களை பஹ்ரைன் நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

இந்தியர்களுக்கு புதிய பணி விசாக்களை(New Work Visa) வழங்குவதை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய விசா தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா உட்பட ஆறு நாடுகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. Labor Market Regulatory Authority இந்த புதிய நடவடிக்கை தொடர்பான செய்தியை இன்று(13/06/21) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவை தவிர இலங்கை,பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் புதிய வேலை விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் ரெட் லிஸ்டில் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நாடுகளில் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரே புதிய விசா வழங்கல் மீண்டும் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மற்றோரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் தற்போதைய சூழ்நிலையில் பஹ்ரைன் நாட்டின் புதிய வேலை விசாவுக்காக பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வு செய்யவும்.

Add your comments to Search results for New Visa