BREAKING NEWS
latest

Mumbai Airport - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Mumbai Airport செய்திகள், கட்டுரைகள், Mumbai Airport புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Friday, February 16, 2024

விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை என்பதால் மனைவியுடன் நடந்து சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்

Image : மும்பை விமான நிலையம்

விமான நிலையத்தில் வீல் சேர் இல்லை என்பதால் மனைவியுடன் நடந்து சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா 116 விமானம் மும்பை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் சிறிது தாமதமாக 2.10 மணியளவில் வந்தடைந்தது.இந்த விமானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 80 வயது முதியவர் தனது மனைவியுடன் மும்பைக்கு வந்திருந்தார். வணிக வகுப்பு இருக்கையில் பயணம் மேற்கொண்ட இருவரும், முன்னதாகவே சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தனர்.

ஆனால், சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக ஒரே ஒரு சக்கர நாற்காலி மட்டும் கிடைத்துள்ளது. அதனை மனைவிக்கு கொடுத்த முதியவர், விமானத்திலிருந்து குடியேற்ற சோதனை மையம் வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளார். இந்த நிலையில், குடியேற்ற சோதனை மையம் அருகே வந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மருத்துவமனைக்கு முதியவரை அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில்,குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் சக்கர நாற்காலி கேட்டிருந்தனர். ஆனால், 15 நாற்காலி மட்டுமே இருந்ததால், அடுத்த சுற்றில் அனுப்பி வைப்பதாக முதியவரிடம் தெரிவித்தோம். ஆனால், வயது மூப்பால் இருவருக்கும் உள்ள உடல் பிரச்னை காரணமாக ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் எனக் கருதி அவர் தனது மனைவியுடன் நடந்து சென்றார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவ சான்று வைத்துள்ள பயணிகளை தவிர மற்ற பயணிகள் விமான நிலையங்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக மருத்துவ சான்று முறை நிறுத்திவைக்கப்பட்டு முதியவர்களுக்கு இலவச நாற்காலி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நடக்க முடிந்தவர்களும் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பரபரப்பான மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாட்டால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Old Citizen | Mumbai Airport | Passenger Death

Add your comments to Search results for Mumbai Airport

Monday, November 29, 2021

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் டிசம்பர்-1 முதல் நடைமுறையில் வருகின்ற புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவிற்கு டிசம்பர்-1,2021 முதல் செல்கின்ற சர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Image : Mumbai Airport

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் டிசம்பர்-1 முதல் நடைமுறையில் வருகின்ற புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனாவின் மரபணுமாற்ற Omicron வகை கண்டறியப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவுக்கு 1-டிசம்பர்-2021 புதன்கிழமை முதல் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கான பயண விதிமுறைகளை புதுப்பித்து இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதன் விபரங்கள் பின்வருமாறு:

பயணிகள் பயணம் மேற்கொள்ளும் முன்னரே Air-Suvidha தளத்தில் தங்களுடைய கடந்த 14 நாட்களுக்கான பயண விபரங்கள், 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனையின் எதிர்மறை(Negative) சான்றிதழ் மற்றும் உண்மையான உறுதிமொழி ஆகியவை பதிவேற்ற வேண்டும். தவறான விபரங்கள் பதிவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். Website Link: https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration

அதேபோல் United Kingdom, South Africa, Brazil, Bangladesh,Botswana, China, Mauritius, New Zealand, Zimbabwe, Singapore, Hong Kong மற்றும் Israel உள்ளிட்ட தீவிரமான'At-Risk" பிரிவில் உட்படுத்தப்பட நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளுக்கு நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் இந்த நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு மட்டுமே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடிவும். முடிவு எதிர்மறையாக(Negative) இருந்தால் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். 8 வது நாள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் அதிலும் Negative ஆக இருந்தால் சுய தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும்.

பட்டியலில் இல்லாத வளைகுடா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் செய்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நாடுகளில் இருந்து வருகின்ற விமானங்களில் உள்ள 5 சதவீதம் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவார்கள். எதாவது சூழ்நிலையில் இப்படிப்பட்ட பயணிகள் யாராவது Positive என்று தெரிய வந்தால் Isolation வார்டுக்கு மாற்றப்படுவார்கள். இந்த விதிமுறைகள் கடல் மற்றும் தரைவழியாக இந்திய எல்லைகளை அடையும் நபர்களுக்கும் பொருந்தும்

வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் வருகையின் போது அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் போது கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களும் வகுக்கப்பட்ட நெறிமுறையின்படி சோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Image credit: Moh India

Add your comments to Search results for Mumbai Airport